
மும்பை: பேருந்து மோதி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க மோட்டார் விபத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா, தானே நகரில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஐ.டி. ஊழியர் தினேஷ் யஷ்வந்த் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்து நின்ற ஒரு பேருந்து வேகமாக புறப்பட்டு பின்னர் திடீரென பின்னோக்கி வந்துள்ளது. அப்போது தினேஷ் மீது மோதியதில் உயிரிழந்தார்.

