Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: பொய்கை சந்தையில் ரூ.75 லட்சம் வர்த்தகம்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

பொய்கை சந்தையில் ரூ.75 லட்சம் வர்த்தகம்

EDITOR

வேலூர்: தமிழகத்தில் நடைபெறும் மாட்டுச்சந்தைகளில் வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை பிரபலமானதாகும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும் இச்சந்தைக்கு உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்து மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. சாதாரணமாக இங்கு ஒரு கறவை மாடு ₹50 ஆயிரம் முதல் ₹2 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் காளைகள், உழவு மாடுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. கால்நடைகள் மட்டுமின்றி அதோடு இணைந்த காய்கறி சந்தையும் இங்கு நடக்கிறது. இன்று நடந்த மாட்டு சந்தையில் 1,000க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இதுகுறித்து கால்நடை வியாபாரிகள் கூறுகையில், கோடை முடிந்தும் கடந்த சில தினங்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. தற்போது கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. இவைகளில் விலை ஏற்றம் இறக்கமாக உள்ளது. இதனால் விற்பனையும் ₹75 லட்சம் வரை நடந்தது. அதோடு கால்நடைகளுடன் கோழிகள், ஆடுகள் மற்றும் கால்நடைகளுக்கான கயிறு, கழுத்துப்பட்டி உட்பட பொருட்கள் அனைத்தும் விற்பனை அமோகமாக நடந்ததாக விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் தெரிவித்தனர்.

The post பொய்கை சந்தையில் ரூ.75 லட்சம் வர்த்தகம் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
  • பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை; 4 பேருக்கு ஆயுள் தண்டனை
  • வளர்ச்சி அடைந்த பிஹாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி
  • பாகிஸ்தானை சேர்ந்த டிஆர்எப் உலகளாவிய தீவிரவாத அமைப்பு – அமெரிக்கா அறிவிப்பு; இந்தியா வரவேற்பு
  • ஹைதராபாத் கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
  • பரஸ்பர நலன், சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு

You Might Also Like

முகமது ஹாஷிம் சாஹிப் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

July 5, 2025

நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் நடைபெறும்; திட்ட பணிகளை அலுவலர்கள் தினமும் களஆய்வு செய்ய வேண்டும்: ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு அதிரடி உத்தரவு

July 12, 2025

கரூர் அருகே இடப்பிரச்சனையால் ஒருவர் வெட்டிக்கொலை..!!

July 14, 2025

நெல்லையில் அல்வாவில் தேள்: பிரபல கடைக்கு நோட்டீஸ்

July 16, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?