Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

EDITOR

சென்னை: போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் வழக்கில், கடந்த மாதம் 23ம் தேதி நடிகர் ஸ்ரீகாந்த்தும் கடந்த 26ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள், நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்ரீகாந்த் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்தியன், வழக்கறிஞர் கே.பிரேம் ஆனந்த் ஆகியோர் ஆஜராகி, போதை பொருள் பயன்படுத்தியதாக, வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முதல் எதிரி பிரதீப் குமார் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று வாதிட்டனர்.

நடிகர் கிருஷ்ணா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்பேன்ட் தினேஷ், மனுதாரரை கைது செய்தற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்காமல் காவல்துறை கைது செய்துள்ளது. அவரிடம் நடத்திய மருத்துவ பரிசோதனையில் போதைப் பொருள் பயன்படுத்தியது நிரூபிக்கப்படவில்லை என்றார். காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிரசாத் என்பவரிடம் நடத்திய விசாரணையில் போதை பொருள் புழக்கம் குறித்து தெரிய வந்தது. அவரது ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரவீன் குமாரும், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரீகாந்த் ஜூன் 23ம் தேதியும், கிருஷ்ணா ஜூன் 26ம் தேதி கைது செய்யப்பட்டனர் என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல்குமார், நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இருவரும் தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனும் அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் செலுத்த வேண்டும். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இருவரும் தினமும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.

 

The post போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • ‘ஆட்சியில் பங்கு’ – அன்புமணி கருத்தும், ராமதாஸ் விளக்கமும்
  • காமராஜர் குறித்து நான் பேசியதை விவாதப் பொருளாக்க வேண்டாம்: திருச்சி சிவா எம்.பி
  • சவுதி புரோ லீக் சீசனின் சிறந்த வீரர் விருதை வென்ற ரொனால்டோ: ரசிகர்கள் தேர்வு!
  • பட்ஜெட் விலையில் ரியல்மி C71 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
  • சிக்னல் கோளாறால் மின்சார ரயில் சேவை பாதிப்பு: விம்கோ நகரில் பயணிகள் போராட்டம்
  • தமிழகம் முழுவதும் மது, போதைக்கு எதிராக 100 கருத்தரங்கு: கிருஷ்ணசாமி அறிவிப்பு

You Might Also Like

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 42,250 கன அடியாக நீடிப்பு!

July 10, 2025

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம்

June 24, 2025

தைலம், கற்பூரம் கலந்து மூக்கில் தேய்த்ததால் 8 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு பலி

July 16, 2025

சுசீந்திரம், தெங்கம்புதூரில் புதிய குடிநீர் தொட்டி அமைக்கும் பணிகள்

June 20, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?