Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: மடப்புரம் கோயில் காவலாளி மரண வழக்கு 5 பேரிடம் 8 மணிநேரம் சிபிஐ தீவிர விசாரணை
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

மடப்புரம் கோயில் காவலாளி மரண வழக்கு 5 பேரிடம் 8 மணிநேரம் சிபிஐ தீவிர விசாரணை

EDITOR

மதுரை:சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் (28), போலீஸ் விசாரணையில் தாக்கப்பட்டு மரணம் அடைந்த வழக்கை சிபிஐ டிஎஸ்பி மோகித்குமார் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அஜித்குமாருடன் தாக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் அருண், அஜித் நண்பர்கள் பிரவீன், வினோத், அஜித்தின் தம்பி நவீன்குமார், கோயில் ஊழியர் கார்த்திகைவேல் ஆகிய 5 பேரும் மதுரை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டது.

அதன்படி 5 பேரும் மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேற்று காலை ஆஜராகினர். அவர்களிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ டிஎஸ்பி மோகித்குமார் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சாட்சிகள் அளித்த பதில் விபரங்களை உடனுக்கு உடன் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்து கொண்டனர்.

* கைதான ஏட்டு செல்போன் பறிமுதல்
மடப்புரம் கோயில் ஊழியர் அஜித்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள குற்றப்பிரிவு ஏட்டு ராஜாவின் வீடு திருப்பாச்சேத்தி அருகே மழவராயனேந்தலில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு சிபிஐ குழுவினர், ராஜாவின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். அவர் புதிதாக கட்டி வரும் வீடு குறித்த ஆவணங்களை அவரது மனைவியிடம் கேட்டு வாங்கினர். ராஜாவின் 2 செல்போன்களையும் பறிமுதல் செய்து தடயவியல் ஆய்விற்கு அனுப்ப உள்ளனர்.

The post மடப்புரம் கோயில் காவலாளி மரண வழக்கு 5 பேரிடம் 8 மணிநேரம் சிபிஐ தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
  • பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை; 4 பேருக்கு ஆயுள் தண்டனை
  • வளர்ச்சி அடைந்த பிஹாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி
  • பாகிஸ்தானை சேர்ந்த டிஆர்எப் உலகளாவிய தீவிரவாத அமைப்பு – அமெரிக்கா அறிவிப்பு; இந்தியா வரவேற்பு
  • ஹைதராபாத் கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
  • பரஸ்பர நலன், சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு

You Might Also Like

மசினகுடி-தெப்பக்காடு சாலையில் கூட்டமாக வலம் வரும் யானைகள்: சுற்றுலா பயணிகள் கண்டுவியப்பு

July 17, 2025

செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

July 12, 2025

தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவை சீரானது

June 25, 2025

திருக்குறளில் கலப்படம் செய்வதை ஏற்க முடியாது; ஆளுநர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை கண்டனம்

July 16, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?