சென்னை: மதுரை ஆதீனம் 60 வயதுக்கு மேற்பட்டவர் என்பதால், வசிக்கும் இடம் சென்று காவல்துறை விசாரணை நடத்தலாம் என்றும், காவல்துறை விசாரணைக்கு மதுரை ஆதீனம் ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. விசாரணை முடியும் வரை சாட்சியங்களை கலைக்க கூடாது; தலைமறைவாக கூடாது. தலைமறைவானால் மதுரை ஆதீனம் மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறைக்கு ஐகோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது. மேலும், ரூ.10,000க்கான இரு நபர் ஜாமினை மதுரை ஆதீனம், மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மதுரை ஆதீனத்துக்கு முன்ஜாமின் நிபந்தனைகள்: காவல்துறைக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.