Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: மாம்பழம் விற்பனை குறைவால் பாதித்த விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: விக்கிரமராஜா கோரிக்கை
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

மாம்பழம் விற்பனை குறைவால் பாதித்த விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: விக்கிரமராஜா கோரிக்கை

EDITOR

சென்னை: மாம்பழம் விற்பனை குறைவால் பாதித்த விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார். பூந்தமல்லியில் வணிகர் நல வாரியத்தில் கட்டணம் இல்லா புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில பொருளாளர் சதக்கத்துல்லா தலைமையில் பூந்தமல்லி வியாபாரிகள் சங்க மண்டபத்தில் நேற்று நடந்தது. சங்க செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் தரன், துணைத் தலைவர் சார்லஸ், ஆதம்ஷா முன்னிலை வகித்தனர். சிறப்பு முகாமை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் அளித்த பேட்டி:
வணிகர் குடும்ப நல உதவியை ரூ.5 லட்சமாக உயர்த்தி ஆணையிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதோடு, முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த உள்ளோம். தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்களை கட்டணம் இல்லாமல் வணிகர் நல வாரியத்தில் சேர்க்கும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிளைச் சங்கத்திலும் உள்ள வணிகர்களை 100 சதவீதம் நல வாரியத்தில் சேர்க்கும் கிளைகளுக்கு தங்க காசு பரிசு வழங்கப்படும்.

மாம்பழத்தை கல் வைத்து பழுக்க வைப்பதாக மக்கள் சாப்பிட பயப்படுகின்றனர். இதுகுறித்து வியாபாரிகளை அழைத்து ஆலோசனை செய்து வருகிறோம். புகைமூட்டம் செய்துதான் மாம்பழம் பழுக்க வைக்க வேண்டும். மக்கள் வாங்கி சாப்பிட்டால் மட்டும்தான் மாம்பழம் அதிகம் விற்பனைக்கு வரும். பாதிக்கப்படுகின்ற விவசாயிகளுக்கு அரசு தலையிட்டு இழப்பீடு வழங்க வேண்டும். வியாபாரிகள் முறையாக பில் போட்டு செல்ல வேண்டும். சிறு வியாபாரிகளை வணிக வரித்துறை அதிகாரிகள் துன்புறுத்துவதில்லை. இவ்வாறு கூறினார்.

The post மாம்பழம் விற்பனை குறைவால் பாதித்த விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: விக்கிரமராஜா கோரிக்கை appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • தவெக கொடியை பயன்படுத்த தடை கோரிய வழக்கு: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
  • அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கு தூதரகம் புதிய எச்சரிக்கை!
  • ஈராக் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 50 பேர் பலியானதாக தகவல்!
  • ஏழைத்தொழிலாளர்களை குறிவைத்து கிட்னி எடுப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது: செல்வப்பெருந்தகை கண்டனம்
  • அடுத்த 30 நாட்களில் தமிழ்நாட்டில் 2.5 கோடி பேரை திமுக உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!
  • சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்!

You Might Also Like

ஆகாயத் தாமரை படர்ந்து காணப்படும் குமரலிங்கம் ராஜவாய்க்கால்

July 10, 2025

வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்த பின் 15 நாளுக்குள் வாக்காளர் அடையாள அட்டையை (EPIC) பெறலாம்!!

June 19, 2025

பாக்கு தோட்டத்திற்குள் புகுந்து உணவு தேடிய காட்டு யானை: கிராம மக்கள் அச்சம்

July 10, 2025

திருவள்ளூர் அருகே மீண்டும் தீப்பிடித்த டீசல் டேங்கர்

July 13, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?