சென்னை: மாற்றுத் திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் நவீன சக்கர நாற்காலியை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. மாற்றுத் திறனாளிகள், போரில் காயமடைந்து நடக்க முடியாத ராணுவத்தினர் ஆகியோர் பயன்பெறும் வகையில் உலக தரத்தில், எடை குறைவான ‘ஒய் டி ஒன்’ என்ற நவீன சக்கர நாற்காலியை சென்னை ஐஐடி ஆராய்ச்சி குழுவினர் வடிவமைத்துள்ளனர். டிரிம்பிள் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் இதற்கான ஆராய்ச்சி பணி மேற்கொள்ளப்பட்டது.
சென்னை ஐஐடியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ராணுவ மருத்துவ பணிகள் தலைமை இயக்குநர் வைஸ் அட்மிரல் அனுபம் இந்த நாற்காலியை அறிமுகப்படுத்தினார். அவர் பேசும்போது, ‘‘மாற்றுத்திறனாளிகள், போரில் கால்கள் பாதிக்கப்பட்ட ராணுவத்தினருக்கு ஐஐடி உருவாக்கியுள்ள இந்த நவீன சக்கர நாற்காலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.