
புர்னியா: பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோர் வாக்குகளைத் திருடுகிறார்கள் என்று காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பிஹாரின் புர்னியாவில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வாக்குகளைத் திருடுகிறார்கள் என்பதை நான் தெளிவாகக் கூறுகிறேன். அதற்காக அவர்களின் முழு முயற்சிகளும் நடந்து வருகின்றன. பிஹார் இளைஞர்களிடம் நான் ஒன்றை சொல்கிறேன், பிஹாரின் ஜென் ஸி தலைமுறையினரிடமும் நான் சொல்கிறேன், வாக்குச் சாவடியில் விழிப்புடன் இருப்பது உங்கள் பொறுப்பு, இதனை நடக்க விடாதீர்கள். அவர்கள் உங்கள் எதிர்காலத்தைத் திருட முயற்சிக்கிறார்கள், அதனால்தான் அவர்கள் வாக்குகளைத் திருடுகிறார்கள்” என்றார்

