ராமேசுவரம்: ‘இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கட்டுப்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் பேரணி, கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
‘இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, ரோலர் மடி, சுருக்கு மடி மீன்பிடி முறைகளை பயன்படுத்தி இலங்கை கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழக விசைப்படகு மீனவர்களை தடுத்து நிறுத்த வேண்டும்’ என வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.