சென்னை: “ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கான அரிசியை அரசு ஏன் மசூதிகளுக்கு தர வேண்டும்? ஏன் ரேஷன் கடை மூலம் நேரடியாக அம்மக்களுக்கு வழங்கக்கூடாது?. மதவாதத்தை ஊக்குவிக்க தமிழக அரசு துணை போகிறதா என்ற கேள்வி எழுகிறது.” என்று இந்து முன்னணி கேள்வி எழுப்பி உள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது அரசியல்வாதிகள் மதசார்பற்ற அரசு என மார்தட்டிக் கொள்வதில் எத்தனை பித்தலாட்டம் மறைந்து இருக்கிறது என்ற உண்மையை இந்துக்கள் உணர வேண்டும்.