சென்னை: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒரு இடம் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த மாதம் 29ம் தேதி, ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகள் காலியாகின்றன. அதற்கு முன்னதாக, இப்பதவிகளுக்கு புதியவர்களை தேர்ந்தெடுக்க, 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. தற்போதுள்ள எம்.எல். ஏ.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில், தி.மு.க., கூட்டணிக்கு நான்கு எம்.பி.,க்கள் கிடைப்பர்; அ.தி.மு.க., கூட்டணிக்கு இரண்டு எம்.பி., பதவி உண்டு.

இந்நிலையில், 4 இடங்களில் ஒன்றை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கியுள்ள தி.மு.க., மற்ற 3 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார் எனக்கூறப்பட்டுள்ளது.

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *