Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: ரூ.6 கோடி முன்பணம் விவகாரம்.. நடிகர் ரவிமோகன் பதில்தர சென்னை உயர்நீதிமன்றம் ஆணை..!!
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

ரூ.6 கோடி முன்பணம் விவகாரம்.. நடிகர் ரவிமோகன் பதில்தர சென்னை உயர்நீதிமன்றம் ஆணை..!!

EDITOR

சென்னை: படத்தில் நடிக்க பெற்ற ரூ.6 கோடி முன்பணத்தை திரும்ப தரக்கோரி பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு நடிகர் ரவிமோகன் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரவி மோகன் தயாரிப்பில் உருவாக உள்ள படம் ‘ப்ரோ கோட்’. ரவிமோகன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அவரே கதாநாயனாகனாக நடிக்க, எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வடக்குப்பட்டி ராமசாமி மற்றும் டிக்கிலோனா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இப்படத்தை இயக்குகிறார்.

இந்நிலையில், பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், 2 படங்களில் நடிக்க நடிகர் ரவிமோகனுடன் கடந்த 2024ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், அதற்காக அவர் ரூ.6 கோடி முன்பணம் வாங்கியதாகவும் தெரிவித்த நிறுவனம், கால்ஷீட் கொடுத்தும் பணிகளை துவங்காததால் இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்திருக்கிறது. மேலும், அந்த பணத்தை சொந்த தயாரிப்பு, சொந்த செலவுக்கோ பயன்படுத்த வாய்ப்புள்ளதால், ப்ரோ கோட் படத்தை தயாரிக்க, வேறு நிறுவன தயாரிப்பிலும் நடிக்க ரவிமோகனுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு நடிகர் ரவிமோகன் பதிலளிக்க உத்தரவிட்டு, வருகிற 23ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

The post ரூ.6 கோடி முன்பணம் விவகாரம்.. நடிகர் ரவிமோகன் பதில்தர சென்னை உயர்நீதிமன்றம் ஆணை..!! appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • ஹைதராபாத் கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
  • பரஸ்பர நலன், சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு
  • ‘மான்செஸ்டர் போட்டியில் ஆடும் லெவனில் இந்தியா ஒரு மாற்றம் செய்ய வேண்டும்’ – ரஹானே பகிர்வு
  • ஐஎன்எஸ் நிஸ்தர் மீட்பு கப்பல் கடற்படையில் இணைப்பு!
  • மயிலாடுதுறை டிஎஸ்பி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எஸ்பி, இன்ஸ்பெக்டரிடம் டிஐஜி நேரில் விசாரணை
  • தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான்: அழுத்தமாக சொன்ன தமிழிசை

You Might Also Like

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை..!!

July 18, 2025

பாஜக அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து சென்னையில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்: பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கின

July 9, 2025

சேலத்தில் கலைஞர் சிலை அவமதிப்பு அமைதியான தமிழகத்தை அமளி காடாக்கி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி: அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்

July 15, 2025

கிருஷ்ணகிரியில் நாளை மறுநாள் மாங்கனி கண்காட்சி

June 19, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?