நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளால் ஏற்படும் மனித உயிரிழப்புகளை தடுக்க தொலைதொடர்பை ஏற்படுத்த வேண்டுமென அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தேயிலைத் தோட்டங்கள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியே உள்ளன. இதனால், காட்டு மாடு, புலி, சிறுத்தை, கரடி, மான்கள் மற்றும் காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் தேயிலைத் தோட்டங்களுக்குள் அடிக்கடி புகுந்து விடுகின்றன. அங்குள்ள பயிர்களை நாசம் செய்வதோடு, மனிதர்களையும் அவ்வப்போது தாக்கி வருகின்றன.