Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: வாகன வசூலுக்கான மறு ஒப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை கட்டணமின்றி பொதுமக்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்: மாநகராட்சி அறிவிப்பு
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

வாகன வசூலுக்கான மறு ஒப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை கட்டணமின்றி பொதுமக்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்: மாநகராட்சி அறிவிப்பு

EDITOR

சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டண வசூலுக்கான ஒப்பம் இன்றுடன் முடிவடைவதையொட்டி வாகன வசூலுக்கான மறு ஒப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை பொதுமக்கள் வாகன நிறுத்துமிடங்களில் எவ்விதக் கட்டணமுமின்றி தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மேலும் வெளியான அறிக்கையில்; பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டண வசூலுக்கான ஒப்பம் இன்றுடன் (20.07.2025) முடிவடைவதையொட்டி வாகன வசூலுக்கான மறு ஒப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை பொதுமக்கள் வாகன நிறுத்துமிடங்களில் எவ்விதக் கட்டணமுமின்றி தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டண வசூல் பணியானது தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது மேற்கண்ட நிறுவனத்துடனான ஒப்பந்தம் இன்றுடன் (20.07.2025) முடிவடைகிறது.

இதனையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்தத்திற்கான ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் சார்பில் மறு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் வரை, பொதுமக்கள் தங்கள் வாகனங்களை, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் எவ்விதக் கட்டணமுமின்றி நிறுத்திக் கொள்ளலாம்.

இது தொடர்பான புகார்களுக்கு, பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

The post வாகன வசூலுக்கான மறு ஒப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை கட்டணமின்றி பொதுமக்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்: மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்: சந்தேக நபரின் வீடியோ, புகைப்படங்களை வெளியிட்ட காவல் துறை
  • புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட மின் வாரிய சேவைகளுக்கு கட்டணம் உயர்வு!
  • சூரிய மின்கலம் தயாரிக்கும் பர்ஸ்ட் சோலார் நிறுவனத்தில் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு முக்கியத்துவம்
  • சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயிலில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்
  • வாகன நிறுத்த ஒப்பந்தம் நிறைவு; பொதுமக்கள் கட்டணமின்றி வாகனங்களை நிறுத்தலாம்: மாநகராட்சி அறிவிப்பு
  • காரை ஏற்றி கொல்ல முயன்றதாக சொன்ன வழக்கு; ஒரு மதத்தினர் மீது திடீரென குற்றம்சொல்ல என்ன காரணம்..? படுக்கையில் இருந்தவாறு மதுரை ஆதீனம் மழுப்பல் பதில்

You Might Also Like

இளையோர் இலக்கிய பயற்சி தொடக்கம்

July 10, 2025

பாராட்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி: மாற்றுத் திறனாளிகள் சங்க தலைவர் தங்கம் அறிக்கை

June 22, 2025

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 7% குறைவு..!!

July 11, 2025

மல்லை சத்யா எனக்கு துரோகம் செய்துவிட்டார்: வைகோ குற்றச்சாட்டால் பரபரப்பு

July 10, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?