Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: 11,480 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி கடன் மானியம்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

11,480 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி கடன் மானியம்

EDITOR

சென்னை: பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 11,480 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி கடன் மானியத்தை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (கேவிஐசி) வழங்கியது.

புதுடில்லியில் நடந்த இதற்கான விழாவில் ஆணைய தலைவர் மனோஜ் குமார், தனது குழுவினருடன் சேர்ந்து பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு இம்மானியத்தை வழங்கினார். இந்நிகழ்வில் ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரூப் ராசி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கேவிஐசி தலைவர் மனோஜ் குமார் பேசும்போது, ‘‘பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் நிதி உதவி வழங்குவதோடு, லட்சக்கணக்கான இளைஞர்கள் பெண்கள் மற்றும் கைவினைஞர்களை சுயதொழிலில் செய்து தொழில்முனைவோருடன் இணைக்கும் சமூக இயக்கமாகவும் மாறியுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் வேலைவாய்ப்பு மற்றும் சுயசார்பை உருவாக்குவதில் இத்திட்டத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. நாட்டின் 6 மண்டலங்களும் இந்த நிதியுதவி திட்டத்தில் பெருமளவில் பயனடைந்துள்ளன.

தென் மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா கேரளாவில், 4,565 திட்டங்களுக்கு ரூ.116 கோடி மானியம் வழங்கப்பட்டது. அதே நேரத்தில் இத்திட்டங்களுக்கு ரூ.343 கோடிக்கும் அதிகமான கடன்கள் அனுமதிக்கப்பட்டன. பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 10,18,185 குறு நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன, இதற்காக இந்திய அரசு ரூ.73,348 கோடி கடனை அனுமதித்துள்ளது. இதற்கு ஈடாக, பயனாளிகளுக்கு ரூ.27,166 கோடி விளிம்புத்தொகை மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, நாடு முழுவதும் 90,04,541க்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தின் மூலம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர், இது நாட்டின் மிகவும் பயனுள்ள சுயதொழில் திட்டங்களில் ஒன்றாகும்’’ என்று தெரிவித்தார்.

The post 11,480 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி கடன் மானியம் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • ஹைதராபாத் கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
  • பரஸ்பர நலன், சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு
  • ‘மான்செஸ்டர் போட்டியில் ஆடும் லெவனில் இந்தியா ஒரு மாற்றம் செய்ய வேண்டும்’ – ரஹானே பகிர்வு
  • ஐஎன்எஸ் நிஸ்தர் மீட்பு கப்பல் கடற்படையில் இணைப்பு!
  • மயிலாடுதுறை டிஎஸ்பி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எஸ்பி, இன்ஸ்பெக்டரிடம் டிஐஜி நேரில் விசாரணை
  • தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான்: அழுத்தமாக சொன்ன தமிழிசை

You Might Also Like

ஒன்றிய பாடத்திட்டத்தில் மதவெறி வன்விஷ விதைகளை உடனடியாக நீக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

July 18, 2025

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் திடீர் புகைமூட்டம்: அலறியடித்து வெளியேறிய நோயாளிகள்

July 15, 2025

ஊட்டி பூங்காவில் கரடி முகாம்

July 7, 2025

டாஸ்மாக்கில் காலி மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டம்.. ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

June 25, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?