
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பார்ட்டி’ திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
2018ம் ஆண்டு அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாரான படம் ‘பார்ட்டி’. ஆனால் ஃபிஜி தீவில் இருந்து வரக்கூடிய சான்றிதழ்கள் கிடைக்க தாமதமானால் படம் இதுவரை வெளியாகவில்லை. தற்போது இப்பிரச்சினை முடிவடைந்து அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் சிவா மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு எடுத்து வருகிறார்கள்.

