Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: 50,000 பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கழிவு நீர் உந்து நிலையம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

50,000 பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கழிவு நீர் உந்து நிலையம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!

EDITOR

சென்னை : சென்னை சேப்பாக்கம் – திருவல்லுக்கேணி தொகுதியில் ரூ.8.13 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்து, ரூ.9.68 கோடியில் புதிய திட்டப்பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இன்று (23.6.2025) சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் சார்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி, சி.ஐ.டி குடியிருப்பு முதல் தெருவில் 3.01 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 113 தெருக்களில் வாழும் 50,000 பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 6.25 எம்.எல்.டி செயல்திறன் கொண்ட H2S வாயு கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய சாலையோர கழிவு நீர் உந்து நிலையத்தை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-116க்குட்பட்ட டாக்டர் பெசன்ட் சாலையில் 9.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 படுக்கை வசதியுடன் கட்டப்படவுள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைக் கட்டடம் கட்டும் பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.

மேலும், வார்டு-114, பங்காரு தெரு சென்னை நடுநிலைப்பள்ளியில் சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியின் கீழ், 2.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் 7 வகுப்பறைகள், 1 சமையலறை மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடத்தை துணை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

ராயபுரம் மண்டலம், வார்டு-63, கொய்யாத்தோப்பு, கோமளீஸ்வரன்பேட்டை நாகப்பன் தெருவில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளியில் சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியின் கீழ், 1.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் 6 வகுப்பறைகளுடன் கட்டப்பட்ட புதிய பள்ளிக் கட்டடத்தினையும் திறந்து வைத்தார்.

பின்னர், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-114க்குட்பட்ட லாக் நகரில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 1.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட முதல் தளத்தில் மேடையுடன் கூடிய பல்நோக்குக் கட்டடத்தினை துணை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

The post 50,000 பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கழிவு நீர் உந்து நிலையம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்! appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • சாலை, குடிநீர் பணிகளை மழைக்கு முன்பு முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
  • மே.இ.தீவுகள் அணி வீரர்கள் மீது லாரா குற்றச்சாட்டு
  • 4-வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா விளையாட வேண்டும்: சொல்கிறார் இர்பான் பதான்
  • ஹாம்பர்க் டென்னிஸ் கால் இறுதியில் பல்கேரிய வீராங்கனை
  • சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஆந்த்ரே ரஸல் ஓய்வு!
  • முருகப்பா ஹாக்கி அரை இறுதியில் ரயில்வேஸ், ஐஓசி மோதல்

You Might Also Like

குற்றாலத்தில் சாரல் திருவிழா வரும் 19ம் தேதி தொடங்குகிறது: ஆட்சியர் அறிவிப்பு

July 9, 2025

கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை

June 22, 2025

நீட் என்பது முதல் கோணல், முற்றிலும் கோணல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

June 23, 2025

ஒரே ஆண்டில் 2வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

July 5, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?