‘ப.பாண்டி’, ‘ராயன்’ படங்களுக்குப் பிறகு இயக்குநராக தனுஷ் களமிறங்கியுள்ள மூன்றாவது படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. தான் இயக்கிய முதல் இரண்டு படங்களில் தானே நடித்திருந்த தனுஷ், இதில் முழுக்க முழுக்க புதியவர்களை களமிறக்கியுள்ளார்.
காதலில் பிரேக்-அப் ஆகி துவண்டு போயிருக்கும் ஹீரோ பிரபுவுக்கு (பவிஷ்) அவரது பள்ளி தோழியான ப்ரீத்தியுடன் (ப்ரியா பிரகாஷ் வாரியர்) திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. தனது வருங்கால மனைவியிடம் தனது உடைந்த காதலை பிரபு சொல்ல தொடங்கும்போது ஃப்ளாஷ்பேக் விரிகிறது.