உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த ஜனவரி 13-ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா சிவராத்திரி நிகழ்வுடன் நிறைவு பெற்றது.

கங்கையும், யமுனையும், சரஸ்வதியும் ஒன்று கூடும் இடமான திரிவேணி சங்கமத்தில் தினமும் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவகள் புனித நீராடினர். இவர்களுடன் சினிமாத் துறையைச் சேர்ந்தவர்களும் புனித நீராடினர்.