சவூதி, துபாய், குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ஏராளமான இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவில் சாதி, மதம் பார்த்து உயர்பதவி வழங்குவதை போல் அல்லாமல் திறமைக்கு மதிப்பு அளித்து அரபிகள் பல மதத்தவர்களுக்கும் உயர் பதவிகள் வழங்கி நல்ல ஊதியத்தையும் அளித்து வருகின்றனர். ஆனால், அவ்வாறு பணிபுரிந்து வருபவர்களில் சில சங்கிகள் இந்தியாவில் செய்வதை போல், வளைகுடாவிலும் சமூக வலைதளங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், இஸ்லாமிய மதம், அவர்களின் புனிதத் தலமான கஃபத்துல்லாவை கொச்சைப்படுத்துவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு இந்திய நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு செய்யும் சங்கிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டும் வருகின்றனர். இது அரபு நாடுகளின் தலைவர்கள், அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலரது கவனத்துக்கு சென்றுள்ளதால் இந்தியர்களின் பேஸ்புக், ட்விட்டர் கணக்குகளை கண்காணிக்க தொடங்கி உள்ளனர். இந்த சங்கிகளின் செயலால் அங்கு உழைத்து பொருள் ஈட்ட சென்ற சாமானிய இந்தியர்களுக்கும் நெருக்கடி அதிகரித்து உள்ளது.

இந்த சூழலில் தான் வளைகுடா நாடுகளில் பணிபுரிபவர்கள் முஸ்லிம்கள் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) ஆகியோருக்கு எதிராக வெறுப்பை பரப்புகின்ற அனைத்து சங்கிகளின் பெயர்களையும் பட்டியலிடுமாறு சவுதி அறிஞர் ஆபிதி சஹ்ரானி தன்னை ட்விட்டரில் பின்பற்றுபவர்களைக் கேட்டுக்கொண்டார்.

அவர் Send Hindutva Back home என்ற ஹேஸ் டேக்கையும் பயன்படுத்தியுள்ளார். மற்றொரு ட்வீட்டில், வளைகுடா நாடுகளில் மில்லியன் கணக்கான இந்தியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் சிலர் COVID__19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் அனைத்து உதவிகளும் சிகிச்சைகளும் இலவசமாக இங்கு அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாத கும்பல்கள் முஸ்லீம் குடிமக்களுக்கு எதிராக குற்றங்களைச் செய்கின்றனர்”. என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதவெறியை தூண்டும் விதமாக இஸ்லாத்திற்கு எதிராக கருத்துப் பதிபவர்களின் பதிவுகளை ஸ்க்ரீன் ஷாட் செய்து தம்முடன் பகிருமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அவரது அழைப்புக்கு பதிலளித்த அவரைப் பின்தொடரும் வளைகுடா நாடுகளின் முக்கியஸ்தர்கள் மத்திய கிழக்கில் பணிபுரியும் ஊழியர்களின் மதவாத போக்குகள் மற்றும் இஸ்லாத்திற்கு எதிராக பரப்பப்படும் பதிவுகளின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிரத் தொடங்கியுள்ளனர்.

இதே போல் துபாய் இளவரசி, அனைத்து இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவில் கொரோனாவை வைத்து இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்படும் குற்றங்களுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

அரபு நாடுகளின் தொடர் அழுத்தங்களை தொடர்ந்து கொரோனாவுக்கு மதச்சாயம் பூச வேண்டாம் இந்திய பிரதமர் மோடியும் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *