லாஸ் வேகாஸ்: ஃப்ரீஸ்டைல் கிராண்ட் ஸ்லாம் டூர் செஸ் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி அரை இறுதிக்கு முன்னேறினார். அதேவேளையில் ஆர்.பிரக்ஞானந்தா பட்டம் வெல்வதற்கான வேட்கையில் இருந்து வெளியேறினார்.
ஃப்ரீஸ்டைல் கிராண்ட் ஸ்லாம் டூர் செஸ் தொடரின் 4-வது கட்ட போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவுடன் மோதினார். முதல் ஆட்டத்தில் கருப்பு காய்களுடன் விளையாடிய அர்ஜுன் எரிகைசி 64-வது நகர்த்தலின் போது டிரா செய்தார்.