Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை!
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை!

EDITOR

கடலூர் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் 4 மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்யா பன்னீர்செல்வம் மீது தற்போது புதிய வழக்கு பதிந்து லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துகிறது.

2016-2021ல் பண்ருட்டி எம்.எல்.ஏ.வாக இருந்த சத்யா பன்னீர்செல்வம் மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சத்யா கணவர் பன்னீர்செல்வம் பண்ருட்டி நகராட்சி தலைவராக இருந்தபோது ஊழல் செய்ததாக வழக்கு போடப்பட்டது. பன்னீர்செல்வம் மீதான வழக்கின் அடிப்படையில் 2024 பிப்ரவரியில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது.

2011 முதல் 2016ம் ஆண்டு வரை பன்னீர்செல்வம் பண்ரூட்டி நகர மன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அப்போது டெண்டர் விடுவதில் முறைகேடு செய்து ரூ. 20 லட்சம் வரை பணமோசடி செய்ததாக ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாராணை நடத்தி வருகின்றனர். இந்த சொத்துக்குவிப்பு மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவரது வீட்டில் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

 

The post அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை! appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • ஹைதராபாத் கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
  • பரஸ்பர நலன், சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு
  • ‘மான்செஸ்டர் போட்டியில் ஆடும் லெவனில் இந்தியா ஒரு மாற்றம் செய்ய வேண்டும்’ – ரஹானே பகிர்வு
  • ஐஎன்எஸ் நிஸ்தர் மீட்பு கப்பல் கடற்படையில் இணைப்பு!
  • மயிலாடுதுறை டிஎஸ்பி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எஸ்பி, இன்ஸ்பெக்டரிடம் டிஐஜி நேரில் விசாரணை
  • தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான்: அழுத்தமாக சொன்ன தமிழிசை

You Might Also Like

முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா பற்றி வெளியிட்ட வீடியோவை துளியும் ஏற்க முடியாது: அதிமுகவுக்கு திடீர் ஞானோதயம்

June 23, 2025

சிந்தூர் ஆபரேஷனின் வெற்றி ஆயுதப் படை பணியாளர்களை போற்றும் வரவேற்பு நிகழ்ச்சி: ஆளுநர் பங்கேற்பு

June 22, 2025

நாளை தொடங்குகிறது ஒரு புரட்சிகரத் திட்டம்: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

July 14, 2025

அண்ணா பல்கலை. மாணவி வழக்கு.. தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை விசாரிக்க கோரி ஐகோர்ட்டில் மனு!!

June 21, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?