Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: ஆறுகாணி அருகே வந்தபோது ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் உடல்நலக்குறைவு: சாலையோரம் நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

ஆறுகாணி அருகே வந்தபோது ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் உடல்நலக்குறைவு: சாலையோரம் நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு

EDITOR

அருமனை: ஆறுகாணி அருகே வந்தபோது அரசு பஸ் டிரைவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சாலையோரம் பஸ்சை நிறுத்தினார். இதனால் அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது. ஆறுகாணி பகுதியில் இருந்து இன்று அதிகாலை சுமார் 3.30 மணிக்கு மார்த்தாண்டம் நோக்கி எண் 86 வழித்தடத்தில் இயங்கும் அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சை சுந்தர் ராஜ் என்பவர் ஓட்டினார். பஸ்சில் சில பயணிகள் இருந்தனர். இந்த நிலையில் அரசு பஸ் பத்துகாணி சந்திப்பில் வந்தபோது திடீரென டிரைவர் சுந்தர் ராஜுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. உடல் முழுவதும் வியர்த்து படபடப்பாக ஏற்பட்டதால் சுந்தர் ராஜ் தொடர்ந்து அரசு பஸ்சை ஓட்ட முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே மேற்கொண்டு பஸ்சை ஓட்டி சென்றால் விபரீதம் ஆகிவிடும் என்பதை உணர்ந்த சுந்தர் ராஜ், அந்த பகுதியிலேயே சாலையோரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு, பயணிகளிடம் நிலைமையை எடுத்து கூறினார்.

இதையடுத்து பயணிகள் இறங்கி சென்றனர். இதையடுத்து சுந்தர் ராஜ் பஸ்சுக்குள்ளேயே ஓய்வெடுத்தார். சுமார் 6 மணியளவில் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே அங்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம் சுந்தர் ராஜ் ஆறுகாணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்தபோது சுந்தர் ராஜின் முதுகு பகுதியில் சுளுக்கு போன்று ஏற்பட்டுள்ளதாக டாக்டர் கூறினார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டதால் விபரீதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆறுகாணி அருகே வந்தபோது ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் உடல்நலக்குறைவு: சாலையோரம் நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • “மோடியின் தலைமை இல்லையெனில் பாஜக 150 இடங்களில் கூட வென்றிருக்காது” – நிஷிகாந்த் துபே
  • “வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான பயணத்தை இளைஞர்கள் வழிநடத்த வேண்டும்” – பியூஷ் கோயல்
  • மதுரையில் விளம்பர நிறுவனங்களே தெருவிளக்குகளை நிறுவி பராமரிக்கும் திட்டம்
  • நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை தடுக்க இந்தியா எடுக்கும் முயற்சிகள் என்ன?
  • அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளி வழிபாடு: பெண் பக்தர்கள் குவிந்தனர்; கூழ் ஊற்றி பிரார்த்தனை
  • ஊட்டி தாவரவியல் பூங்கா நர்சரியில் அலங்கார செடிகள் உற்பத்தி தீவிரம்

You Might Also Like

குன்னூர் அருகே அதிகரட்டி பகுதியில் தெரு விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்த நிலையில் கிராமத்தில் சிறுத்தை உலா

June 24, 2025

சமூகத்தை பிளவுபடுத்தும் எண்ணம் கொண்டவர்களால் அரசின் சாதனைகளை சகிக்க முடியவில்லை: அறநிலையத்துறையின் நடவடிக்கைகளை பட்டியலிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

July 2, 2025

காரியாபட்டியில் அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு: மகப்பேறு மருத்துவரை நியமிக்க உத்தரவு

July 17, 2025

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 57,000 கனஅடியாக உயர்வு

July 6, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?