
இந்தூர்: ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்தூரில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி முதல் ஆட்டத்தில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையையும், 2-வது ஆட்டத்தில் 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் தோற்கடித்து இருந்தது. ஆனால் அடுத்த 2 ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக தலா 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

