Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: ஊட்டி அருகே வீட்டுக்குள் நுழைந்து நாயை தூக்கிச் செல்லும் சிறுத்தை: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

ஊட்டி அருகே வீட்டுக்குள் நுழைந்து நாயை தூக்கிச் செல்லும் சிறுத்தை: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

EDITOR

ஊட்டி: ஊட்டி அருகே குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை நுழைந்து வளர்ப்பு நாயை தூக்கிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பெரும்பாலான கிராம பகுதிகளில் சிறுத்தை, கரடி, புலி, யானை, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக சமீப நாட்களாக குடியிருப்புகளில் வளர்க்கப்படும் நாய்களை சிறுத்தைகள் சர்வ சாதாரணமாக வேட்டையாடி செல்கின்றன. இதனால், இரவு நேரங்களில் நடமாடவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இந்நிலையில், ஊட்டி ரோஸ் மவுண்ட் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று குடியிருப்புக்குள் நுழைந்து அங்கிருந்த வளர்ப்பு நாயை தூக்கி செல்கிறது.

நாய் அலறும் சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது, நாயை அடித்துக் கொன்று சிறுத்தை தூக்கி சென்றுள்ளது. இதனைக் கண்டு அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். நாயை அடித்துக் கொன்று சிறுத்தை தூக்கிச் செல்லும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எனவே, குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஊட்டி அருகே வீட்டுக்குள் நுழைந்து நாயை தூக்கிச் செல்லும் சிறுத்தை: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் ராஜினாமா!
  • “கேரளாவின் சமூக பொருளாதார வளர்ச்சியில் அச்சுதானந்தனின் பங்கு மகத்தானது” – பெ.சண்முகம் புகழஞ்சலி
  • “முதல்வர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார்” – அமைச்சர் துரைமுருகன் தகவல்
  • கீழடி அகழாய்வில் திருத்தப்பட்ட அறிக்கை ஏதும் கோரப்படவில்லை: மத்திய அரசு
  • விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை ஜூலை 26-ல் பிரதமர் திறந்து வைக்கிறார்!
  • நரேந்திர மோதிக்கு 1,000 கிலோ மாம்பழத்தை வங்கதேசம் அனுப்பியது ஏன்?

You Might Also Like

ரிதன்யா கணவர் குடும்பத்தாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

July 7, 2025

உடன்குடி அனல்மின் நிலையத்தில் 1,320 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை!!

July 18, 2025

செல்போன் டவர் உச்சியில் 2 பேர் ஏறியுள்ளதால் பரபரப்பு

June 23, 2025

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3,069 கன அடியாக சரிவு

June 24, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?