
தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) கைவிடக் கோரி தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. புதுக்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, தவாக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட நிலையில், தேசியக் கட்சியான காங்கிரஸ் சார்பில் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்தது கூட்டணிக் கட்சியினரிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நம்மிடம் பேசிய திமுக ஐடி விங்க் அணியின் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அறந்தாங்கி பி.செந்தில்வேலன், “இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என திமுக அழைப்பு விடுத்து, 2 தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால், ஏனோ ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொள்ளவில்லை.

