
கோவை: ‘எஸ்ஐஆர் பணிகளில் திமுகவினரின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. இச்சம்பவங்கள் தொடர்ந்தால் தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்படும்’ என்று எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை வ.உ.சி மைதானத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் இன்று பலர் ஒன்றிணைந்து வந்தே மாதரம் பாடலை பாடினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் கூறியது: “வந்தே மாதரம் பாடல் 150-வது நிறைவையொட்டி பிரதமர் மோடி ஆண்டு முழுவதும் கொண்டாட அறிவுறுத்தியுள்ளார். இது கட்சி நிகழ்ச்சி அல்ல. நியாயமாக பார்த்தால் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் பங்கு பெற்ற முக்கியமான அரசியல் கட்சியினர் அனைவரும் இதை முன்னெடுத்து செல்ல வேண்டும். சுதந்திர போராட்டத்தில் அதிகமான பங்களிப்பு வழங்கியது நம்முடைய தமிழகம்.

