கடந்த 10 ஆண்டுகளில் நீதிமன்ற வழக்குகளுக்காக மத்திய அரசு ரூ.400 கோடிக்கும் அதிகமாக செலவு செய்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் கூறியுள்ளதாவது: கடந்த 2023-24-ம் நிதியாண்டில் நீதிமன்ற வழக்குகளுக்காக ரூ.66 கோடியை மத்திய அரசு செலவழித்துள்ளது. கடந்த 2022-23-ம் நிதியாண்டை விட இது ரூ.9 கோடி அதிகமாகும்.