கரூர்: குளித்தலை அருகே அரசுப் பேருந்தும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
கோவை சுகுணாபுரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ்(50). இவர், மனைவி கலையரசி(45), மகள் அகல்யா(25), மகன் அருண்(22) ஆகியோருடன் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கீழையூரில் உள்ள அக்னி வீரனார் கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். ஈரோடு மாவட்டம் வில்லரசன்பட்டியைச் சேர்ந்த விஷ்ணு(24) காரை ஓட்டியுள்ளார்.