
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சிக் காலத்தில், டெண்டர் மூலம் கலப்பட நெய் வாங்கியது தொடர்பாக சிபிஐ தலைமையிலான சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தி வருகிறது.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள போலேபாபா ஆர்கானிக் டெய்ரி நிறுவனத்திற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டு அவர்கள் ரூ.250 கோடிக்கு 68 லட்சம் கிலோ நெய்யை விநியோகம் செய்ய வேண்டும். ஆனால், 2022-ல் இவர்கள் விநியோகம் செய்த நெய் தரமற்றதாக உள்ளதாக அப்போதைய அறங்காவல் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர்களை பிளாக் லிஸ்டில் வைத்தாலும், ஒரு லிட்டர் பால் கூட தயாரிக்காத இதே நிறுவனம் தொடர்ந்து 2024 ஜூன் மாதம் வரை கலப்பட நெய்யை விநியோகம் செய்துள்ளது.

