Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பெறப்படும் :அமுதா ஐ.ஏ.எஸ் விளக்கம்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பெறப்படும் :அமுதா ஐ.ஏ.எஸ் விளக்கம்

EDITOR


சென்னை : ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ நாளை தொடங்க உள்ள நிலையில், இதுவரை பெறப்பட்ட மனுக்கள் குறித்து தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர் அமுதா ஐ.ஏ.எஸ் விளக்கம் அளித்தார். அதில், “நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சர் சிதம்பரத்தில் தொடங்கி வைக்கிறார். மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அரசின் சேவைகளை கொண்டு செல்வது இத்திட்டத்தின் நோக்கம். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடப்பது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் வரும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காண வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

இதனை அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தி உள்ளோம். கடந்த 4 ஆண்டுகளில் 1.05 கோடி கோரிக்கை மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 1.01 கோடி மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து பட்டா மாற்றம், மின் இணைப்பில் பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் வருகின்றன. ஓய்வூதியம், இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை குறித்து கோரிக்கை மனுக்கள் வரபெற்றுள்ளன. கோரிக்கை மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும். சில மனுக்களுக்கு அன்றே தீர்வு காணப்பட்டுவிடும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 10,000 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. நகர்ப்புறங்களில் 3,738 முகாம்கள், ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்கள் நடைபெறவுள்ளன.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் நகர்ப்புறத்தில் 43 சேவைகள், ஊரகப் பகுதிகளில் 46 சேவைகள் வழங்கப்படவுள்ளன. முகாம் நடக்கும் ஒரு வாரத்துக்கு முன்பு வீடு, வீடாக சென்று மக்களுக்கு தெரியப்படுத்தப்படும். மக்கள் கொண்டுவர வேண்டிய ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்து தெரிவிக்கப்படும். ஆவணங்களை முறையாக மக்கள் கொண்டுவந்தால் உடனடியாக மனு மீது தீர்வு காணப்படும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பெறப்படும். மகளிர் உரிமைத் தொகை பெறாத பெண்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து முகாம்களில் கொடுக்கலாம்.”இவ்வாறு தெரிவித்தார்.

The post கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பெறப்படும் :அமுதா ஐ.ஏ.எஸ் விளக்கம் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • “மோடியின் தலைமை இல்லையெனில் பாஜக 150 இடங்களில் கூட வென்றிருக்காது” – நிஷிகாந்த் துபே
  • “வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான பயணத்தை இளைஞர்கள் வழிநடத்த வேண்டும்” – பியூஷ் கோயல்
  • மதுரையில் விளம்பர நிறுவனங்களே தெருவிளக்குகளை நிறுவி பராமரிக்கும் திட்டம்
  • நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை தடுக்க இந்தியா எடுக்கும் முயற்சிகள் என்ன?
  • அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளி வழிபாடு: பெண் பக்தர்கள் குவிந்தனர்; கூழ் ஊற்றி பிரார்த்தனை
  • ஊட்டி தாவரவியல் பூங்கா நர்சரியில் அலங்கார செடிகள் உற்பத்தி தீவிரம்

You Might Also Like

ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

June 20, 2025

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை !!

July 16, 2025

மான்களின் கூட்டம் பெருகி விட்டதால் சரணாலயம் அமைக்க வேண்டும்

June 29, 2025

சமஸ்கிருத மொழியை விட 22 மடங்கு குறைவாக தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கிய ஒன்றிய அரசுக்கு காங். கண்டனம்

June 24, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?