
சேலம் மாவட்டத்தை சேர்ந்த அருண்ராஜ், எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற மருத்துவர். டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் அரசு மருத்துவ அதிகாரியாக பணியாற்றி உள்ளார். அதனைத் தொடர்ந்து, யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஆர்எஸ் அதிகாரியாக, இந்திய வருவாய் துறையில் தமிழ்நாடு, பிஹார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பணியாற்றியவர். கடந்த மே மாதம் விருப்ப ஓய்வு பெற்ற அருண்ராஜ், ஜூன் மாதம் தவெகவில் இணைந்தார். கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளரான அவரிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம். அவர் அளித்த பேட்டியிலிருந்து…
கரூர் சம்பவத்தில் இருந்து விஜய் மீண்டு விட்டாரா? தற்போது என்ன மனநிலையில் இருக்கிறார்?

