Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: கே.சி.வீரமணி மீது தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

கே.சி.வீரமணி மீது தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

EDITOR

சென்னை: 2021 தேர்தல் வேட்புமனுவில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சொத்து விபரங்களை மறைத்தது, போலியான PAN எண் கொடுத்தது ஆகிய விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழக்கிற்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்தது.

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிட்டார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில், சொத்து விவரங்களை குறைத்து தவறான தகவல்களை தெரிவித்ததாகக் கூறி, வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில், திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கே.சி.வீரமணிக்கு எதிராக தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், திருப்பத்தூர் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் பதிலளிக்க அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்திவைத்தார்.

இந்நிலையில் கே.சி.வீரமணி தேர்தல் ஆணையத்தின் வழக்கிற்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. போலியான PAN எண் கொடுத்தது ஆகிய விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

 

The post கே.சி.வீரமணி மீது தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் நேரில் ஆஜரானதால் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவு வாபஸ் 
  • வணிகர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்: டிஜிபியிடம் விக்கிரமராஜா மனு
  • கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்
  • இண்டியா கூட்டணியில் விரிசலா? – நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை புறக்கணிக்க ஆம் ஆத்மி முடிவு
  • பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் தொடர்பு இல்லை: பாக். தகவல்
  • ரக்பி யு20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை வழிநடத்தும் கிரிக்கெட் வீரர் ரைலி நார்டன்

You Might Also Like

தமிழ்நாட்டில் தென்மெற்குப் பருவமழை 15% கூடுதலாக பெய்துள்ளது!!

June 24, 2025

சுங்கச்சாவடி ஆண்டுக் கட்டணத்தை ரூ.1,500-ஆக குறைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

June 19, 2025

இரு சமூகங்களுக்கிடையே மோதல் புகார் மீண்டும் ஆஜராகாத மதுரை ஆதீனம்: வயதாகிவிட்டதால் காணொலி மூலம் ஆஜராவதாக கோரிக்கை

July 5, 2025

மதுரையில் வரதட்சணைக் கேட்டு மனைவியை துன்புறுத்திய காவலர் பூபாலன் பணியிடை நீக்கம்

July 18, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?