Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: கோயில் ஊழியர் மரணம் சிபிஐ விசாரணை துவக்கம்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

கோயில் ஊழியர் மரணம் சிபிஐ விசாரணை துவக்கம்

EDITOR

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் ஊழியர் அஜித்குமார், நகை திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணையில் உயிரிழந்தார். ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுப்படி, மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் கடந்த 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி சண்முகசுந்தரம், ஏடிஎஸ்பி சுகுமாறன், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், எஸ்ஐ சிவபிரகாசம், எஸ்எஸ்ஐ சிவக்குமார், பாரா போலீஸ் இளையராஜா மற்றும் கோயில் ஊழியர்கள், கோயில் அருகே கடை வைத்துள்ள வியாபாரிகள், அஜித்குமாரிடம் விசாரணை செய்த தனிப்படை போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.

மேலும் ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், அய்யனார், அஜித்தின் தாயார் மாலதி, தம்பி நவீன் குமார், சித்தி ரம்யா, திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன், மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் சதாசிவம், ஏஞ்சல் உள்பட பலரிடம் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை செய்தார். இதுதொடர்பான விசாரணை அறிக்கையை கடந்த 8ம் தேதி ஐகோர்ட் கிளையில் அவர் சமர்ப்பித்தார்.

இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, அந்த உத்தரவு அரசிதழிலும் வெளியிடப்பட்டது. ஐகோர்ட் மதுரை கிளையும் இவ்வழக்கை ஜூலை 15ம் தேதியில் இருந்து சிபிஐ விசாரணை செய்து, ஆக.20ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், சம்பவம் தொடர்பாக பிஎன்எஸ் 103 பிரிவின் கீழ் கொலை வழக்காக சிபிஐ நேற்று வழக்கு பதிந்து விசாரணையை துவங்கியது.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி மோகித் குமார் நியமிக்கப் பட்டுள்ளார். சிபிஐயிடம் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் ஒப்படைக்கப்படும். அதன்பிறகு, பேராசிரியை நிகிதாவின் காரில் இருந்து நகை திருட்டு போனது உண்மையா? நிகிதாவுக்கு ஆதரவாக அழுத்தம் கொடுத்தவர்கள் யார்? ஊழியர் கொலையில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் என தெரிகிறது.

The post கோயில் ஊழியர் மரணம் சிபிஐ விசாரணை துவக்கம் appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • கங்கைகொண்ட சோழபுரத்தில் தமிழக அரசு விழாவுக்கு கோயில் வளாகத்துக்குள் அனுமதி இல்லை: பிரதமர் பங்கேற்பதால் நடவடிக்கை
  • விஜய்க்கு ‘வலை’, சீமானுக்கும் ‘சிக்னல்’ – இபிஎஸ் நகர்வின் வியூகம் என்ன?
  • கல்வி உரிமை நிதி ரூ.600 கோடி நிலுவையை அரசு உடனடியாக செலுத்த வேண்டும்: அன்புமணி
  • “திமுக பணத்தில் ஒரு சிங்கிள் டீ கூட சிபிஎம் தொண்டன் குடிக்கவில்லை” – இபிஎஸ்-க்கு பெ.சண்முகம் பதிலடி
  • 5 ஜெட் விமானங்கள் குறித்த ட்ரம்ப் பேச்சு: பிரதமர் நாடாளுமன்றத்தில் பதிலளிக்க காங். வலியுறுத்தல்
  • ‘எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் தந்திரம்’ – பூபேஷ் பாகேலின் மகன் கைதுக்கு பிரியங்கா காந்தி கண்டனம்

You Might Also Like

கர்ப்பிணியை கீழே தள்ளியவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு..!!

July 14, 2025

தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும்

July 2, 2025

நீலகிரி மாவட்டத்தில் காணாமல் போன ரூ.20 லட்சம் மதிப்புடைய 128 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

June 25, 2025

2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு

July 7, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?