
சென்னை: சிறுவர்களுக்கான சப்-ஜூனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக அணி நேற்று புதுச்சேரி அணியுடன் மோதியது. இதில் தமிழக அணி 15-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
தமிழக அணி சார்பில் பி டுடே 4 கோல்கள் அடித்து அசத்தினார். சவுவிக் ஹால்டர் 3 கோல்களையும், முகமது ரிஹான் 2 கோல்களையும் அடித்து பலம் சேர்த்தனர். குஞ்சாபு நிகில் தேஜ், ஜாக்ரோமாரியோ, முகமது அஸ்லான் லாண்ட்ஜ், ஆர்.ரோஷன், அபிட்நேகோ, கே.ரோஷன் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

