
குப்வாரா: ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதிக்கு அருகே நடந்த ஊடுருவல் முயற்சியின்போது, ராணுவம் நடத்திய தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஊடுருவல் முயற்சி தொடர்பாக கிடைத்த உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், குப்வாராவின் கெரான் செக்டாரில் நேற்று (நவம்பர் 07) தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைக் கண்டறிந்தபோது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதால், பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

