
புதுடெல்லி: உடற் தகுதி விஷயத்தை பொறுத்தவரை டி20 உலகக் கோப்பை தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணி இன்னும் தயாராகவில்லை என பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கவுதம் கம்பீர் பிசிசிஐ.டிவி இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: வீரர்களின் ஓய்வறை வெளிப்படையாகவும் நேர்மறையான இடமாகவும் அமைந்துள்ளது. இது இப்படிதான் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் உடற்தகுதியைப் பொறுத்தவரை நாங்கள் இன்னும் இருக்க விரும்பும் இடத்தில் இல்லை என்றே நினைக்கிறேன். இதுதொடர்பாக அணி வீரர்களுடன் உரையாடி உள்ளேன். இந்த விஷயத்தில் உறுதியாக இருக்க விரும்புகிறோம்.

