
சண்டிகர்: தன்னம்பிகை வைத்து செயல்படும்போது அதற்கான வெற்றிகள் தேடி வரும் என்று இந்திய மகளிர் அணி கிரிக்கெட் வீராங்கனை ஷபாலி வர்மா தெரிவித்தார்.
கடந்த வாரம் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிச் சுற்றில் ஷபாலி வர்மா சிறப்பாக விளையாடி 87 ரன்கள் குவித்து ஆட்டநாயகி விருதை கைப்பற்றினார். மேலும், பந்துவீச்சின்போது 2 விக்கெட்களைச் சாய்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

