சென்னை: தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்துக்கு கடந்த மே மாதம் நடத்தப்பட்ட தேர்தலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மறுதேர்தல் நடத்தும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்களின் இறுதி பட்டியலை தயாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்களின் இறுதி பட்டியலை ஜூலை 21-க்குள் தயாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடைமுறைகளை ஆகஸ்ட் 31-க்குள் முடித்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
The post தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்துக்கு கடந்த மே மாதம் நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்தது ஐகோர்ட் appeared first on Dinakaran.