Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் நாளை மறுதினம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் கே.என்.நேரு உறுதி
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் நாளை மறுதினம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் கே.என்.நேரு உறுதி

EDITOR

திருச்சி: ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் பார்வையிட்டு தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம் வரும் 16ம் தேதி (நாளை மறுதினம்) முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் பேருந்து முனையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து முனையம் செயல்பாட்டிற்கு வந்த சில நாட்களில் அனைத்து கடைகளும் இயங்கும்.

அதேபோல் சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் வழக்கம் போல் செயல்பாட்டில் இருக்கும். அங்கிருந்து வெவ்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பேருந்து வசதிகள் தொடரும். தற்போதைக்கு தனியார் பேருந்துகள் விருப்பப்பட்டால் பஞ்சப்பூருக்கு வரலாம். மக்கள் முழுமையாக பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் போது தனியார் பேருந்துகளும் அங்கு வந்து விடுவார்கள். ஆனால் அனைத்து அரசு பேருந்துகளும் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். இவ்வாறு கூறினார்.

The post திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் நாளை மறுதினம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் கே.என்.நேரு உறுதி appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
  • பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை; 4 பேருக்கு ஆயுள் தண்டனை
  • வளர்ச்சி அடைந்த பிஹாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி
  • பாகிஸ்தானை சேர்ந்த டிஆர்எப் உலகளாவிய தீவிரவாத அமைப்பு – அமெரிக்கா அறிவிப்பு; இந்தியா வரவேற்பு
  • ஹைதராபாத் கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
  • பரஸ்பர நலன், சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு

You Might Also Like

கோவை, நீலகிரிக்கு இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுப்பு

June 25, 2025

பிராட்வே பேருந்து முனைய வளாகம், பல்நோக்கு வணிக வளாகம் அமைக்கப்படும் திட்டத்திற்கு அனுமதி வழங்கியது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்..!!

July 7, 2025

திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட விபத்து குறித்து உயர் நிலை விசாரணை நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

July 13, 2025

மத மோதலை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

July 17, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?