Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக நடுரோட்டில் காதலனை தாக்கிய இளம்பெண்: கோவையில் பரபரப்பு
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran Tamilnadu

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக நடுரோட்டில் காதலனை தாக்கிய இளம்பெண்: கோவையில் பரபரப்பு

EDITOR


கோவை: திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக நடுரோட்டில் காதலனை இளம்பெண் தாக்கிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் நேற்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடந்தது. முகாம் முடிந்த நிலையில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. கலெக்டர் அலுவலக ஊழியர்கள் பணிகளை முடித்து தங்களது வீடுகளுக்கு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு இளம் காதல் ஜோடி பேசி கொண்டு இருந்தனர். அவர்கள் திடீரென பொதுமக்கள் முன்னிலையில் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுனர். வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த அந்த இளம்பெண், தனது காதலனின் கன்னத்தில் பளார் என அறைந்ததுடன் முகத்தில் ஓங்கி குத்தினார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கலெக்டர் அலுவலகம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அங்கு வந்து இருவரையும் தடுத்து நிறுத்தி, விசாரித்தனர். விசாரணையில், வடவள்ளியை சேர்ந்த அந்த பெண்ணை, திருப்பூர் அவிநாசிபாளையத்தை சேர்ந்த வாலிபர் கடந்த 9 மாதமாக கோவையில் தனியாக வீடு எடுத்து தங்க வைத்து இருந்ததாகவும், திருமணம் செய்வதாகக் கூறி குடும்பம் நடத்தி விட்டு ஏமாற்றியதாகவும் கூறினார். மேலும், அந்த காதலனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் வந்தால் மட்டுமே தான் அங்கிருந்து செல்வேன் என அடம்பிடித்தார். இதையடுத்து போலீசார் அந்த இளம்பெண்ணை சமாதானம் செய்து இருவரையும் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இது தொடர்பாக போலீசார் இருவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் ஜோடி இருவரும் நடுரோட்டில் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் நடந்து சென்ற பொதுமக்கள் இடையே அதிர்ச்சி, பரபரப்பை ஏற்படுத்தியது.

The post திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக நடுரோட்டில் காதலனை தாக்கிய இளம்பெண்: கோவையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
  • பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை; 4 பேருக்கு ஆயுள் தண்டனை
  • வளர்ச்சி அடைந்த பிஹாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி
  • பாகிஸ்தானை சேர்ந்த டிஆர்எப் உலகளாவிய தீவிரவாத அமைப்பு – அமெரிக்கா அறிவிப்பு; இந்தியா வரவேற்பு
  • ஹைதராபாத் கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
  • பரஸ்பர நலன், சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு

You Might Also Like

குமரி அரசு மருத்துவக்கல்லூரியில் சமையல் கூடம், அம்மா உணவகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை

June 24, 2025

சிறுமுகை அருகே குட்டையில் பதுங்கியிருந்த 7 அடி நீள ராட்சத முதலை: வனத்துறையினர் மீட்டு பவானிசாகர் அணையில் விடுவிப்பு

July 10, 2025

இலங்கை கடற்படை டார்ச்சரால் கடல் செல்ல தயக்கம் ராமேஸ்வரத்தில் 500 படகுகள் கரைநிறுத்தம்

July 1, 2025

ரிதன்யா கணவர் குடும்பத்தாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

July 7, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?