
லாகூர்: பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 378 ரன்கள் குவித்தது.
இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 67 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. டோனி டி ஸோர்ஸி 81 ரன்களும், செனுரன் முத்துசாமி 6 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 84 ஓவர்களில் 269 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தனது 2-வது சதத்தை விளாசிய டோனி டி ஸோர்ஸி 171 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்து நோமன் அலி பந்தில் ஆட்டமிழந்தார்.

