
பாட்னா: ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஜீவிகா தீதிகளுக்கு (மகளிர் சுய உதவி குழுவினர்) அளித்த வாக்குறுதிகளை பாஜக – ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் கடுமையாக சாடியுள்ளன. மேலும், இந்த அறிவிப்புகள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் கூறியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிஹார் முன்னாள் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத், " பிஹார் மக்கள் ஆர்ஜேடி மற்றும் மகாகட்பந்தன் கூட்டணியை நம்பவில்லை. அவர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என்று முடிவு செய்துள்ளனர். எனவே தேஜஸ்வி யாதவின் அறிவிப்புகள் பிஹார் மக்களையோ அல்லது தேர்தலையோ பாதிக்கப் போவதில்லை.” என்றார்

