
அகமதாபாத்: நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 3 பேரை குஜராத் தீவிரவாத தடுப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 3 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளைதீவிரவாத தடுப்புப் படையினர் (ஏடிஎஸ்) நேற்று கைது செய்தனர். இதுகுறித்து ஏடிஎஸ் அதிகாரிகள் நேற்று வெளியிட்ட அறிக்கை: போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் வீரஜீத்சின் பார்மர் கண்காணிப்பில், ஏடிஎஸ் இன்ஸ்பெக்டர் நிகில் பிரம்பத், சப் இன்ஸ்பெக்டர் ஏ.ஆர்.சவுத்ரி ஆகியோர் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது சிலர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர்களது நடவடிக்கைகள் கடந்த ஓராண்டாக கண்காணிக்கப்பட்டன. அப்போது, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் 3 பேர் தொடர்பு வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் ஆயுதங்களை பரிமாறிக் கொள்ளும்போது ஏடிஎஸ் படையினர் கைது செய்தனர்.

