
பாமா விஜயம், நரகாசுவர வதம், கிருஷ்ண துலாபாரம் ஆகிய மூன்று புராணக் கதைகளைக் கொஞ்சம் மாற்றி உருவான படம், ‘பாரிஜாதம்’.
முதல் பகுதி நரகாசுரன் கதை. தேவர்களிடமிருந்து பெற்ற வரங்களால் யாராலும் வெல்ல முடியாத சக்திகளைக் கொண்டிருக்கிறான், நரகாசுரன். அவனை யாராலும் அடக்க முடியவில்லை. எப்படி அடக்குவது என்றும் தெரியவில்லை. அவனுடைய முற்பிறப்பில் நரகாசுரனின் தாயாக இருந்த, இப்போது கிருஷ்ணரின் மனைவிகளில் ஒருவரான பாமாவால் அடக்க முடியும் என்று நினைக்கிறார் நாரதர். அதற்கான வேலைகளில் இறங்கும் அவர், அதைச் செய்து முடிப்பது ஒரு கதை.

