
புதுடெல்லி: மத்திய அரசின் அலுவலகங்களில் இருந்த பழைய கழிவுகளை விற்பனை செய்ததன் மூலம் ரூ.800 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதைக் கொண்டு 7 வந்தே பாரத் ரயில்களை வாங்க முடியும்.
இதுகுறித்து மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: கடந்த 2021-ம் ஆண்டில் அக்டோபர் 2-லிருந்து 31-ம் தேதி வரை சிறப்பு தூய்மை இந்தியா திட்டத்தை மேற்கொள்வது என மத்திய அரசு முடிவெடுத்தது.

