
1977-78-ல் பிஷன் சிங் பேடி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. அது ஒரு நெருக்கமான தொடர். அதில் ஆஸ்திரேலியா 3-2 என்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்தத் தொடரில்தான் 8 கவுண்டி போட்டிகளில் இந்தியா அங்கு விளையாடியது, 8 போட்டிகளிலும் வென்று சாதனை படைத்தது.
அந்தத் தொடர் ஏன் நெருக்கமான தொடர் என்றால், முதல் 2 டெஸ்ட்களில் ஆஸ்திரேலியா வெல்ல, 3, மற்றும் 4-வது டெஸ்ட்களில் இந்தியா வெற்றி பெற, கடைசி டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இதில் கடைசி இன்னிங்சில் இந்திய அணிக்கு வெற்றி பெற 490 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இந்திய அணி 445 ரன்களைக் குவித்ததும் மறக்க முடியாது.

