மலையாளத்தில் ஹிட்டடித்த ‘மார்கோ’ படத்தின் இயக்குநர் ஹனிஃப் அதேனி அடுத்ததாக இந்திப் படம் இயக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது.
மலையாளத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மார்கோ’. இதன் இயக்குநர் ஹனிஃப் அதேனியின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. தற்போது இந்தியில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்திப் படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.