பிரயாக்ராஜ் நகரில் கடந்த 45 நாட்களாக நடைபெற்ற சிவராத்திரி புனித குளியலுடன் மகா கும்பமேளா நேற்று முடிவடைந்தது. இதையடுத்து பிரயாக்ராஜ் நகரம் இயல்புநிலைக்கு திரும்புகிறது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த ஜனவரி 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு, தினமும் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். பல்வேறு அகாராக்களைச் சேர்ந்த துறவிகள் இதில் பங்கேற்றனர்.