
புதுடெல்லி: தாய்லாந்து – மியான்மர் எல்லையில் சைபர் மோசடி மையங்கள் அதிகளவில் உள்ளன. இங்கிருந்து சர்வதேச அளவில் அனைத்து விதமான சைபர் மோசடி சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் வெளிநாட்டு வேலை என கூறி தாய்லாந்து அழைத்து வரப்படுபவர்களை மியான்மர் எல்லையில் உள்ள சைபர் மோசடி மையங்களில் சீனாவை சேர்ந்த கும்பல் வலுக்கட்டாயமாக பணியமர்த்துகிறது. இந்த கும்பலிடம் சிக்கியவர்கள் எளிதில் தப்பிக்க முடியாது.

